Tuesday 27 November 2012

ஒலக எழுத்தாளர் சாருவுக்கு வந்த காதல் கடிதம். சாரு டைம்ஸ் (27/11/2012) !!!!

ஈலக்கிய உலகின் பவர் ஸ்டார் சாரு நிவேதிதா அவர்கள் தனக்கு வந்த ஸ்பாம் மெயில் ஒன்றை, ஒரு பெண் எழுதிய காதல் கடிதம் என்று வாய்க்கு வந்தபடி ஒளறி தனது தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். கடிதம் ஸ்பாம் என்பதை இணைய அறிவு ஒரு சதவிதம் உள்ளவன் கூட சொல்லி விடுவான். ஆனால் தனது அடிமைகளால் என்சைக்லோப்பீடியான்னு என்று அன்போடு அழைக்க படும் மண்டைக்கு இது ஸ்பாம் என்று தெரியாமல் போனது ஆச்சிரியமே.


இது ஸ்பாம் என்பதருக்கு ஆதாரம்: Possible spammer: joylove

காதல் கடிதத்தில் இருந்தது:
//”நான் சும்மா நட்புக்காகப் போட்ட கடிதத்தை காதல் கடிதம் என்று சொல்லி கொச்சைப் படுத்தி என்னை மானபங்கம் செய்து விட்டார் எழுத்தாளர்” என்று சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து மீண்டும்  என்னை சிக்கலில் மாட்டி வைத்து விடக் கூடாதே என்று பயந்துதான் பெயரையும் ஈமெயில் முகவரியையும் நீக்கி விட்டேன்.ஆனால் இவரது முகநூலில் மிகக் குறைந்த ஆடையுடன் ஒரு பெண்ணின் படம் காணப்படுகிறது. ///

இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும்...!!!!

கும்மாங்கோ: குஞ்சுகளா, உங்க மண்டைக்கு ஒரு கிரெடிட் கார்டு கொடுத்துருங்க! ஒரு நிமிசத்துக்கு $1.99 - 3.99, ஏகப்பட்ட lovejohnson கூட மஜாதான்!

கொயாக்கோ: அடங்கொய்யால, உன்னை போய் அறிவுஜீவி, இலக்கியத்தை கரைத்து குடித்த ஞானத்தந்தை சொல்லுதுங்க இந்த விடலைங்க! தாய்லாந்த் போய் baht சொருகியும், பாலியல் வரட்சி இன்னும் தல விரித்து ஆடுது, கெரகம்!

கொக்கரக்கோ: நான் சோறு தண்ணி இல்லாமல் ஒரு நாளைக்கு 26 மணி நேரம் இலக்கியம் படிக்கிறேன்னு சொல்லறது இந்த எழவத்தானா?

இந்த அவமானத்தை எப்படி சமாளிப்பது என்று சாரு வட்டத்து அடிமைகளுக்கு சில யோசனைகளை:

சாரு வட்டத்து குஞ்சு: சாரு ஒரு குழந்தை மாதிரி, அவர் ஈசியா ஏமாந்துவிடுவார், இப்படிப்பட்ட ஒரு வெள்ளை மனச குறை கூறும் உங்களை அந்த ஐயப்பன் பார்த்துக்கொள்வார்!

சாரு பாவம். செந்தில் கவுண்டமணிக்கு ஸ்ரீதேவி ஃபோட்டோவை காமிச்சு ஏமாத்துவாருல அது மாதிரி சாரு ஏமாந்துட்டார்.

மண்டை மைன்ட் வாய்ஸ் : அப்போ ஐரோப்பாவில் unclaimed ஆ இருக்கும் $900,000,000 மில்லியன் பணத்தை legal சார்ஜ் $5000 டாலர் அனுப்பி பெற்றுக்கொள்ளுங்கள்னு வந்த மெயிலும் ஃபிராடு தானா...?? இல்ல இல்ல பயபுள்ளைங்க பொறாமையில பேசுதுங்க, சீக்கிரமா உண்டியல் குலுக்கி 5000 டாலரை அனுப்பி மொத்த காசையும் வாங்கிடனும்.
***********************************************************************************************************
உலகம் சுற்றும் கோமாளி...!!! (ஒலக மேப்பை வச்சே உலகத்தை எப்படி சுற்றி வருவது என்று சாணி..சாரி சாரு சொல்கிறார் கேளுங்க)

சாணி (14.3.2010): இன்னும் சில மாதங்களில் நான் அமெரிக்கா செல்ல இருக்கிறேன். அப்போது நிச்சயம் டொரொண்டோவும் உண்டு.

சாணி (12.10.2010): கூடிய விரைவில் ஒரு ஐரோப்பியப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச இலக்கியம் பற்றி உரையாற்றுவேன்.

சாணி (30/03/2012): இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள். சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார். கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

சாணி (17/05/2012): this is about my chile trip. thanks nirmal and thomas samy. இப்போது எனக்கு சிலே போய் விடுவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது. எங்கே சல்லிசாகத் தங்குவது என்பது போன்ற விபரங்களை நெட்டில் தேடிக் கொண்டிருக்கிறேன். நம் நண்பர்களில் யாருக்கேனும் சிலே அல்லது ப்ரஸீலில் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தெரிவிக்கவும். Priyamudan Throgi, Raja Rajendran, Rajesh, Suresh, Aarathu: உங்களால் எவ்வளவு கொடுக்க முடியும்?

சாணி (06/06/2012): சிலே போக வேண்டும், ப்ரஸீல் போக வேண்டும், கூபா போக வேண்டும்… அதற்கு யாராவது ஸ்பான்ஸர் செய்ய முடியுமா, தனியாக முடியாவிட்டால் கூட்டாகச் சேர்ந்தாவது ஸ்பான்ஸர் செய்ய முடியுமா என்று வாசகர் வட்டத்தில் கேட்டால் ....
7:30 to 8:00 மண்டைக்கு அர்ப்பணம்!


***********************************************************************************************************
சாரு அடிமைகள் வட்டத்தின் ரமணா ஸ்டைல் புள்ளி விவரம் : தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி, அதில் தமிழர் மட்டுமே ஐந்து கோடி என்று வைப்போம், அதில் படிக்கத் தெரிந்தவர்கள் மூன்று கோடி, அதில் சாரு போன்ற இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும் அறுபது லட்சம் பேர் வருகிறார்கள். இதை குடும்பத்திற்கு பத்து பேர் என்று பிரிப்போம், அப்படி பார்த்தால் ஆறுலட்சம் குடும்பம் வரும், இதில் புத்தகம் வாங்கி படிக்குமளவு சக்தி கொண்ட குடும்பங்கள் ஐம்பது சதவிகிதம் எனில் அது மூன்று லட்சம் குடும்பம் ! ஆக, ஒரு தரமான படைப்பு வந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகளாவது ஒரே வருடத்தில் விற்கவேண்டும். சரி, சாருவுடையது பின்நவீனத்துவமானது என்றால் ஒரு லட்சமாவது விற்க வேண்டும், எக்சைல் இதுவரை ஐந்தாயிரம் விற்றிருக்கும் (?) இப்போது சொல்லுங்கள், சாரு கோபப்பட வேண்டுமா, தேவையில்லையா ? (நான் சொன்னது தோராயக் கணக்கு, மிகவும் குறைவான சதவிகித கணக்கையே சொல்லியிருக்கிறேன், இதில் வெளிநாட்டுத் தமிழர்களை வேறு சேர்க்கவில்லை)//

எங்களின் கவுண்டர் ஸ்டைல் பதிலடி : வாக்களி, நீங்க எப்போ காமெடி பண்ண ஆரம்பிச்சீங்க. உங்க கணக்கு படியே இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும். இலக்கியங்களை படிப்பவர்களில் சாருவை படிப்பவர்கள் எத்தணை சதவிதம் பேர்ன்னு ஒரு கணக்கு எடுத்திருக்கனும்ல. சுஜாதா,சுரா,அசோகமித்திரன், ஜெமோவை படிக்குறவங்களும் சாருவை படிப்பாங்கன்னு கணக்கு போட்டா எப்படி சார் ???

அப்புறம் 20 சதவிகிதத்துல பாதி பேர் பெண்கள்ன்னு கணக்கு போட்டா, பெண்களில் எத்தணை பேர் சாருவை படிப்பாங்கன்னு கணக்கு போடனும்ல. சின்னதா உங்க வட்டத்துலேயே ஒரு கணக்கு போட்டு பாருங்க. உங்க வட்டத்துல ஆண் பெண் வாசகர்கள் ratio எவ்வளவுன்னு. 2000 பேரில் ஒரு நாலு பொண்ணுங்க இருப்பாங்களா??

எங்க கணக்கு படி பாத்தா எக்ஸைல் ஐந்தாயிரம் வித்ததே ரொம்ப பெரிய விசியமா தெரியுது, மூனு லட்சம் விக்கனும்னு சொல்றீங்களே இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை.
***********************************************************************************************************
மலேசிய பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு சென்னை திரும்பிய ஒலக எழுத்தாளரை வரவேற்க்க ஓட்ட பட்ட போஸ்டர்.
போஸ்டர் பார்த்த சாணி : என் நண்பர் ஒருவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது இந்த போஸ்டரை பார்த்து குழப்பம் அடைந்துவிட்டார்! இதை போட்டோ எடுத்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி எனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டு இருக்கிறார்! இந்த "phenomenon"ஐ அவருக்கு எப்படி விளக்குவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன்!

சாரு வட்டத்து குஞ்சுகள்: இதே மாதிரி தான் ஐடியில வேலை பார்க்கும் இளைஞர்கள் கையில் காசு நிறைய இருந்தால் அதை ஊதாரிதனமா செலவு செய்து கெட்டுப்போயிடுவார்களேன்னு நினைச்சு தான் அவர்களிடம் நண்கொடை வாங்குகிறார் சாரு. இப்படி இளைய சமுதாயத்தை காப்பதற்காக தன்னுடைய பெயர் கெட்டாலும் பராயில்லை என்று வாழும் ஒரு ஜென் குருவை தான் நீங்க இப்படி கலாய்குறீங்க.
***********************************************************************************************************
சாரு வாசகர் வட்டத்தின் அனாடமி:

உள் வட்டம்: வருசத்துக்கு ஒரு முறையாவது காசு இல்லாட்டி சரக்கு கொடுத்து, காது ஜவ்வு கிழியிர அளவுக்கு ஜால்ரா அடிக்கணும். எந்த முரணையும் அபத்தத்தையும் கேள்வி கேட்டகாமல் வாயையும் சூ... மூடிட்டு இருக்க கத்துக்கணும்!

நடு வட்டம்: காசு கொடுக்காட்டி பரவா இல்லை, ஆனா காசு கொடுக்க முடியாத bloody மிடில் கிளாஸ்னு மண்ட மானத்தை வாங்கினா கண்டுக்க கூடாது. காது ஜவ்வு கிழியிர அளவுக்கு ஜால்ரா அடிக்கணும். எந்த முரணையும் அபத்தத்தையும் கேள்வி கேட்டகாமல் வாயையும் சூ... மூடிட்டு இருக்க கத்துக்கணும்!

வெளி வட்டம்: காசு குடுக்காம, கேள்வி கேட்காம, சத்தம் கட்டாம வேடிக்கை பார்த்து, முரணையும் அபத்தத்தையும் விமர்சகர் வட்டத்திலே கிழிக்கலாம்!
***********************************************************************************************************

Friday 16 November 2012

உலக நாயகன் அடுத்த ப்ராஜெக்டில் ஒலக எழுத்தாளர் சாரு வசனம் - சாரு டைம்ஸ் (16/11/2012)..!!!!

சாரு நிவேதிதா - பதிவுலக கைபுள்ளை. இவரோட தொடர் காதல் கடிதங்கள் ஒலக பேமஸ். மிஷ்கினுக்கு நிறையவே எழுதி உள்ளார். அதே போல் நித்தி பிரச்சினை வெடித்த நேரத்தில் கோபிநாத் மண்டையை நீயா நானா நிகழ்ச்சிக்கு அழைத்து கதற கதற ஆழ விட்டு, நித்தி விஷயத்தில் இவர் ஆடிய டபுள் கேமிற்கு விஜய் டிவி முலம் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்தார். இது போதாதா மண்டை கோபிக்கு கடிதம் எழுத... எழுதி தள்ளினர். அவைகளின் சில உங்கள் பார்வைக்கு.
***********************************************************************************************************
சாருசென்ற ஆண்டு (2010) நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை. 
http://charuonline.com/blog/?p=594

சாரு:ஆண்டனியின் பக்கத்தில் உட்கார்ந்து நிகழ்ச்சியின் ஆரம்பக் கட்டங்களைப் பார்த்த போது எனக்கு ஒரு wwf நிகழ்ச்சியைப் பார்ப்பது போல் இருந்தது. ”விடாதே… அந்தப் பச்சை சட்டைக்காரனை விடாதே… நீ என்ன நினைக்கிறேன்னு கேளு… விடாதே விடாதே அமுக்கு….” என்று குறைந்த குரலில் – ஆனால் படு ஆவேசமாகக் கத்துவார் ஆண்டனி. அந்த் சேடிஸத்தை நான் எழுதி நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆண்டனி கோபிநாத்திடம் “மைக்கை அந்தப் பச்சை சட்டைக்காரனிடம் கொடு; அவனைப் பேசச் சொல்லு… இப்போ அந்தக் குரங்கு மூஞ்சிக்காரண்ட்ட குடு…” என்றே கத்திக் கொண்டிருந்தாராம். இதையேதான் நானும் பார்த்தேன்.
http://charuonline.com/blog/?p=630

சாருஎந்த ஒரு மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள ஆண்டனி போன்ற ஊடக நண்பர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
http://charuonline.com/blog/?p=635

சாருஆண்டனி, கோபிநாத் என்ற இரண்டு சமூக விரோதிகளும் என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எல்லோரையும் அவமானப்படுத்துகிறார்கள். உடனடியாக அந்த நீயா நானா நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும். இதற்கு வாசகர்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
http://charuonline.com/blog/?p=757

சாரு அடிமைகள்நீங்க கவலைபடாதீங்க தல, இந்த கோபிநாத்துக்கு நம்ம யாருன்னு ஒரு காட்டு காட்டிடுவோம்! நாங்கள் நீயா நானா நிகழ்ச்சியை புறக்கணிப்போம்!

சாரு (4/11/12): ஒரு இயக்குனரை நண்பனாக மதித்துப் பழகினேன். அவரோ பொதுமேடையில் வைத்து என்னை அவமானப்படுத்தினார். உடனே நான் என்ன செய்தேன்? அவரைக் கிழி கிழி என்று கிழித்து சாருஆன்லைனில் நூறு பக்கம் எழுதினேன். பத்திரிகையில் எழுதினேன். ஆனால் காசு கிடைக்க வேண்டுமானால் என்ன செய்து இருக்க வேண்டும் தெரியுமா? 
என்ன புஷ்கின் சார்… இப்பூடி சொல்லிப் புட்டீங்க? என் மேல என்னங்க கோபம் சார்? என்று கேட்டு அவர் காலில் மஸ்கிட்டோ ஆயின்மெண்ட் தடவி (அவர் அரைக்கால் டவுசர் தான் போடுவார்; அதனால் காலில் கொசு கடிக்காமல் இருக்க ஆயின்மெண்ட் தடவி விட்டிருந்தேன் என்றால் நண்பர்களே உங்களிடம் நான் காசு கேட்டிருக்க மாட்டேன்.

லேட்டஸ்ட் சாருவரும் ஞாயிறு அன்று (11.11.2012) இரவு ஒன்பது மணியிலிருந்து பதினோரு மணி வரை ஒளிபரப்பாகும் நீயா நானா (விஜய் டிவி) நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு பேசுகிறேன். முடிந்தால் பார்க்கவும்.

சாரு வட்டகுஞ்சுகள்நீங்க கவலைபடாதீங்க தல, கண்டிப்பாக கரண்ட் இல்லாட்டியும் பெட்ரோமாக்ஸ் லைட் வச்சாவது பார்த்துவிடுகிறோம்! எங்க மாமன், மச்சான், பங்காளி எல்லோரையும் பார்க்க சொல்றம்! நீங்க இல்லாம அந்த கோபிநாத் பயலால அந்த நிகழ்ச்சி நடத்த முடியாது தல

கும்மாங்கோ2 லட்சம் புத்தகம் விற்கும் கோபிநாத் 2000 புத்தகம் விற்கும் வெறிக்குட்டியிடம் மன்னிப்பு கேட்டிருக்கமாட்டார்! அப்ப நம்ம வெறிக்குட்டிதான் நாலு கால்ல போய் இருக்குமோ? ஆனா கோபிநாத் செகப்பானவரு, பொய் சொல்லமாட்டார், காலும் செகப்பா இருக்கும், மஸ்கிட்டோ ஆயின்மெண்ட் தடவறது சுலபம்!

கொயாக்கோஇந்த விடலை வெறிக்குஞ்சுகள நினைத்தால் பரிதாபமாக இருக்குது, எப்படியெல்லாம் சுடு, சொரணை, மானம், ஈனம், சுய மரியாதை, சுய புத்தி எல்லாத்தையும் அடகு வச்சுட்டு இந்த ஆளுக்கு ஜிங்சா போடவேண்டி இருக்குது!
***********************************************************************************************************
மண்டையோட சினிமா அறிவு நம்ம அறிந்ததே..ஒலக ஈலக்கியதில் அவருக்கு எந்த அளவு அறிவு இருக்கோ, அதே அளவு அறிவு தான் சினிமாவை பத்தியும் மண்டைக்கு இருக்கு. மண்டை கமலை தாக்கி நிறைய பதிவு எழுதி இருப்பது நாம் அறிந்ததே. அதே கமலிடம் இருந்தது மண்டைக்கு, கமலின் அடுத்த படத்துக்கு வசனம் (அட கலாய்க்குறதுக்கு தான்) எழுத வாய்ப்பு வந்தால்..ஒரு கற்பனை ..!!!!!
மிஷ்கின்க்கு எழுதிய காதல் கடிதங்களை மிஞ்சும் அளவுக்கு மண்டையின் கடிதங்கள் இருக்கும். சில கற்பனை கடிதங்கள்...

கடிதம் ஒன்னு: கமல் என்னும் ஒலக கலைஞன்.

கமலுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஈரானிய நடிகர் எஸ்கிமோபட்லியோவுக்கு பிறகு ஆகச் சிறந்த நடிகர் என்றால் அது கமலஹாசன் தான் என்பதை என்னுடைய வாசகர்களிடம் அடிக்கடி கூறி வந்திருக்குறேன்.
அவருடைய ஆகச் சிறந்த படங்களான ஆடு புலி ஆட்டம், டெய்ஸி, பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களை நான் பிராண்ஸ் நடைபெற்ற உலகப் பட விழாவில் திரையிட்ட போது அதை பற்றி எழுதிய விமர்சணம் சீலே நாட்டின் சிறந்த இலக்கிய பத்திரிக்கையான ஸ்திரிமோல்வியாவில் வெளிவந்து இருந்தது. அதில் என்னுடைய பேட்டியை படித்துவிட்டு அந்நாட்டு அதிபர் என்னை பார்க்க வேண்டுமென்று கடிதம் எழுதியிருந்தார், அன்று அவரை பார்த்திருந்தால், துனை ஜனாதிபதி அல்லது கவர்னராகவோ ஆகியிருப்பேன். 
அவந்திகா கூட என்னிடம் புலம்புவது உண்டு, ஏன் எப்ப பார்த்தாலும் கமலோட, “சிகப்புகல் மூக்குத்தி” படத்தையே பாத்திட்டு இருக்கேன்னு. நான் சொல்வேன், இந்த படம் பட்டும் தென்னமெரிக்காவில் வெளிவந்திருந்தால், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது இவருக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்னு. வரும் ஞாயிறு காலை பத்தரை மணிக்கு wintvவில் இந்த படத்தை பற்றி பேசுவதற்காக குறிப்பு எடுத்திக் கொண்டிருக்கும் போது தான் கமலுடைய அலுவலகத்தில் இருந்து ஃபோன் வந்தது.

கடிதம் ரெண்டு: கமல் என்னும் ஒலக கலைஞன் -2

இன்று அதிகாலை நாலரை மணிக்கு வழக்கம் போல் அர்க் குடித்து விட்டு நார்வே நாட்டு எழுத்தாளர் குஸுபுர்கோ என்னுடைய நாவலை கொரிய மொழியில் மொழிபெயர்க்க விரும்புவதாக கூறியதால் அதை ஃப்ரெண்சில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது...என்னுடய நீண்ட நாள் வாசகர் ருவாண்டாவில் இருக்கிறார் பேரழகி, இருபத்தி ஓரு வயது, என்னுடைய எல்லா நாவல்களையும் கரைத்து குடித்தவர், இருபத்தி ஐந்து வருடஙகளாக ருவாண்டாவில் வசித்து வருபவர் சேட்டில் வந்து, hi charu என்றார், நானும் வழக்கம் போல, உனக்கு அங்க வெட் ஆகு.....சாரி சாரி..உனக்கு அங்க வெதர் எல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டு வைத்தேன். மைனஸ் 202 degree யாம். இருந்தாலும் உள்ளாடை அணியாமல் தான் தூங்குவாளாம். கருமம் என்ன பேசினாலும் இங்க தான் வந்து முடியுது.
ஆங் எங்க விட்டேன்..ம்ம் hi charu, உங்களுக்கு ஒரு டிவிடி அனுப்பி இருக்கிறேன், நிங்கள் அந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். கூரியர் வந்த உடன் பார்த்தால் டிவிடி அட்டையில் தமிழில் எழுதியிருந்தது, நான் தமிழில் படிப்பதை விட்டு எழுபது ஆண்டுகள் ஆனபடியால், அவந்திகாவிடம் இதில் என்ன எழுதியிருக்கிறது என்று படித்து காட்ட சொன்னேன். அவள் அதை வாங்கி படித்து விட்டு, எதோ “ தசவதாரம்”னு எழுதியிருக்குன்னு சொல்லிட்டு ஆன்மிக சொற்பொழிவிற்கு போய் விட்டாள். யாரோ கமலஹாசனாம், தமிழில் கொஞ்சம் பிரபலமானவராம். அட்டைப் படத்தில் பார்க்க கொஞ்சம் சுமாராக இருந்தார். சரி இன்று சீன பல்கலைகழகத்தில் நான் இனையத்தில் ஆற்ற வேண்டிய உரை இரண்டு தினம் தள்ளி போனதால், அந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது, நான் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு உலக படமென்று, நெப்போலியன் என்று ஒரு நடிகர் கமலை பார்த்து விடுங்கள் அவன் என் பால்ய நண்பன்னு சொல்லும் போது, அங்கே இருந்த குதிரை கமலை முறைத்து பார்க்கும், இது மாதிரி ஒரு பின்நவினதுவ திரைப்படத்தை நான் கொரிய, ஈராணிய படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

கடிதம் முனு:ஆமாம் நான் கமலுக்கு கதை எழுதுகிறேன் (1)

இந்த விஷயத்தை (கமல் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு) நான் சுராதுவுக்கு தெரிவித்தவுடன், நாளை வேலை வெட்டி இல்லாத நாலு பேர் இந்த விஷயத்தை வைத்து கும்மி அடிப்பார்கள், இது தேவையா? என்றார். அடித்து விட்டு போகட்டும் , அய்யா நான் படாத அசிங்கமா ? எனது வாசகர்கள் அனைவரும் மத்திய தர வர்க்கத்தினர் , அவர்களால் எனது பயணங்களுக்கும் , அன்றாட செலவினுக்கும் பணம் தர இயலாது. நான் என்ன செய்வது ? நான் இருபது வயதில் செய்த வேலைகளை இப்போது என்னால் செய்ய இயலாது . how long should i lead this miserable life ? நானும் கமலும் பத்து வருடங்களுக்கு முன் சிறிய மனஸ்தாபம் கொண்டு கொண்டு இருந்தது உண்மை தான் . but we always had mutual respect to each other. இபொழுது நாங்கள் சேருகிறோம் என்றால் அவர் நடிப்பின் மீது நான் வைத்திருக்கும் மரியாதையும் என் எழுத்தின் பால் அவர் கொண்டிருக்கும் மரியாதையும் தானய்யா காரணம்.

ஒருபோதும் பணத்திற்காக சொம்பு தூக்கும் வேலையை நான் செய்ய மாட்டேன். பணம் தான் எனது குறிக்கோள் என்றால் நான் எதற்கையா தமிழில் எழுதுகிறேன். சுமார் பதினைந்து வருடர்த்திருக்கு முன் இஸ்பானிய எழுத்தாளர் டோரோ தத்யோ விடம் (doro datyio) பேசிகொண்டிருந்த போது (இஸ்பானியா மொழியில் தான் - இஸ்பானிய மொழி தெரிந்தவர்களிடம் அதே மொழியில் பேசுவது தான் அடியேனின் வழக்கம்) , நீங்கள் இஸ்பானியா அல்லது ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் பாதி தமிழ்நாட்டையே விலைக்கு வாங்கி இருக்கலாம் என்றார். ஆனாலும் நான் ஏன் தமிழில் எழுதுகிறேன்?
//கொயாக்கோ: அடிச்சு கூட கேப்பாங்க..அப்ப கூட சொல்லிடாதீங்க...நமக்கு மானம் தான் முக்கியம்.//
இன்னும் புரியவில்லையா உங்களுக்கு ? இப்படி ஒவொருவருக்கும் நான் விளக்கிகொண்டிருந்தால் என் எழுத்து வேலை என்னாவது? இதே கேள்வியை உ த எழுத்தாளரிடம் உங்களால் கேட்க முடியுமா? இதை நான் சுராதுவுக்கு மட்டும் சொல்லவில்லை , என்னிடம் விளக்கம் எதிர்பார்க்கும் அனைவருக்கும் தான் ...

தொடரும் ....
***********************************************************************************************************
படம் பார்த்து கதை சொல்: 

பாரு: டேய் டெனால்ட் டக்..

சொம்பாத்து : தல...அது டொனால்ட் பார்க்.

பாரு: மு...கூ... எனக்கு தெரியாதா, கூபாவுல டொனல்ட் டக்குனு தாண்டா சொல்லுவாங்க
//கொக்கரக்கோ: அவ்வ்வ்வ் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு//
பல்லு குத்துனது போதும். கீழ கோக் பாட்டில் வச்சிருக்கேன், எவனாவது எடுத்து குடிச்சிங்க...நடக்குறதே வேற....

புரியரோகி : தல...நீங்க தானே ரெண்டு வருசம் முன்னாடி கோக்க கோலா கம்பெணிக்கு எதிரா பாலாகாட்டுல நடந்த போராட்டத்துல கலந்துகிட்டு வீர முழக்கம் செஞ்சிங்க, இப்போ நீங்களே அத குடிக்குறீங்க.
//கொக்கரக்கோ :அவர் நல்லா எழுதுறேன்னு கூட தான் சொல்லுறாரு//

பாரு : யாரங்கே...இவனை உடனே...வட்டத்துல இருந்து நீக்குங்க, இனிமே இவன் கூட யாரும் தண்ணி பொழங்க கூடாது.

சொம்பாத்து : தல...சாப்பிட்ட பில்லுக்கு காசு வச்சிருக்கிங்களா, இவ்வளவு கோவபடுறீங்க

பாரு : ஆங்...வந்து...அட விடுப்பா....அது ஒன்னுமில்ல புரியரோகி. நீங்க எல்லாம் என்னை தப்பா புரிஞ்சிட்டீங்க, இது கோக் பாட்டில் தான். ஆனா உள்ள இருக்கிறது, சுக்குத் தண்ணி. இத நான் காலையில நாலு மணிக்கு எந்திருச்சு, ரெண்டு லிட்டர் தண்ணியில கால் கிழோ சுக்கை நல்லா அரச்சு.......

சொம்பாத்து: தல நல்லா நாட்டா இருக்கு பாரு ஆப்லைன்ல போடுங்க படிச்சிக்குறோம் .


பாரு :அப்படிங்குறே....பேசாம இத பத்தி நான் லாஸ் டீவியில அரைமணி நேரம் பேசட்டுமா ???

//சொம்பாத்து மைண்ட் வாய்ஸ் : நீங்க எப்போ அந்த டிவியில பேச ஆரம்பிச்சிங்களோ, அப்போ இருந்தே அது லாஸ் டிவி தான்.//

சொம்பாத்து : நீங்க பேசுங்க, தல.. you proceed.... எப்படி்யும் கேரளாவுல அஞ்சு கோடி பேரு பாப்பாங்க.

புரியரோகி : அத விடுங்க.... இப்போ பிரச்சணை.....இந்த ஃபோட்டோவை அந்த வட்டத்துல யாராவது எடுத்து போட்டா, நாம இனிமே கேரளாவுல தலை காட்ட முடியாதே தல.

பாரு : இதெல்லாம் ஒரு பிரச்சணையா, வழக்கம் போல அது நான் இல்லை, மார்பிங்... எதிரணியினரின் சூழ்ச்சின்னு சொல்லிட்டா சரியா போச்சு.

சொம்பாத்து : நாசமா போச்சு...இத எடுத்ததே நாமா தானே.

பாரு : சரி விடு....எப்படியும் ஒரு வாரத்துல வேற எதுலையாச்சும் மாட்டுவோம்.... அப்போ இதை அவங்களே மறந்திடுவாங்க.

புரியரோகி : எதோ பாத்து செய்யுங்க தல, எனக்கு என்னமோ, இனிமேல் கேரளா போகாதீங்க, போனாலும் ஊரை கூட்டி சொல்லிட்டு போகாதீங்க, அந்த வட்டத்துல இருக்குறவங்க, இந்த ஃபோட்டோவை அவங்களுக்கு அனுப்பிட்டு தன் வேற வேலை பாப்பாங்க.
***********************************************************************************************************
இவன்: சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Monday 5 November 2012

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் என் ஐயனே என் ஐயனே - சாரு டைம்ஸ் (6/11/2012)

ஆல் டைம் கேளிக்கையாளர் சாரு நிவேதிதா மீண்டும் மீண்டும் மீண்டும் தட்டு தூக்கி உள்ளார். இந்த முறை சிலே போய் பட்டாயாவில் படைத்தது போன்ற ஒலக இல்காயம் படைக்க வேண்டி தட்டு ஏந்தி உள்ளார் நம்ம எழுத்தாளர். இவருக்கு ஏன் பணம் அனுப்ப கூடாது என்று ஏற்கெனவே நாங்கள் சொல்லி இருந்தோம். அதை படிக்காதவர்கள் மீண்டும் படித்து
தெரிவுசெய்து கொள்ளுங்கள்.
***********************************************************************************************************
இன்னும் சில பாயிண்ட்ஸ்:

1. "மொழிபெயர்ப்புகள் முடிந்து விட்டால் யாசகம் நின்று விடும். நிச்சயம் மேன் ஏஷியன் புக்கர் எனக்குக் கிடைக்கும்" - உண்மையில் மேன் ஏஷியன் புக்கர் பரிசுக்கு தகுதியானவர்கள் இந்த மாதிரி உளற மாட்டார்கள்!
2. "இப்படி பத்துப் பதினைந்து தர்மசேனன்கள் என் பக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் என் சிலே பயணத்துக்குப் பணம் தர முடியாது. எல்லோரும் மத்தியதர வர்க்கம். அதனால்தான் உங்களிடம் கையேந்துகிறேன். முடிந்தால் தாருங்கள். இல்லாவிட்டால் அவமானம் செய்யாதீர்கள்" - மத்தியதர வர்க்கத்தை எவ்வளவு கேவலமாக பேசுகிறார் இவர்? இவர் பணம் குடுத்து குடுத்தே இவர் வாசகர்கள் ஒரு கேடு கெட்ட மத்தியதர வர்க்கமாகத்தான் இருக்க முடியும்!
3. தாய்லாந்த்  போய் இவர் சாதித்தது இதுதான்.
4. "வழக்கம் போல் யோகமுத்ரா போய் சாப்பிடலாம் என்றால் அதில் இரண்டு பிரச்சினைகள்" - அதாவது ஏழை எழுத்தாளம் தினமும் நூற்றி அம்பது ருபாய் சாண்ட்விச்சும் போய் வர ஆட்டோ சார்ஜ் நூறும் சேர்த்தால், ஓரு ஏழை எழுத்தாளன் காலையில் பசியாற அவர் செலவு செய்யும் தொகை வெறும் இருநூற்றி அம்பது தான்.
5. "தீபாவளி அன்று சாப்பிட எனக்கு எதுவுமே கிடைக்காது, நூடுல்ஸ் இல்ல ஓட்ஸ் தான் சாப்பிடனும்னு ஒரு பத்தி. இன்னொரு பத்தியில் தனக்காக தன் மனைவி சைவமாக இருந்தாலும் பன்றி,நத்தை, மீன், மாட்டு கறியை சமைத்து தரும் அற்புத மனுஷின்னு புகழாரம் - ஏம்பா தெரியாம தான் கேட்குறேன், உங்களுக்காக பன்றி, மாட்டு கறி,நத்தை,மீன் எல்லாம் சமைத்துக் கொடுக்கும் உங்கள் மனைவி தீபாவளி அன்னைக்கு நாலு தோசை சுட்டுக் கொடுக்க மாட்டாங்களா??
***********************************************************************************************************
சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் ஏன் உருவானது என்ற கேள்விக்கு பதில்:

எங்க வட்டத்தில் மொத்தம் 533 பேர். இதுல முக்கால் வாசி பேர் அந்த வட்டத்துல இருந்து சாருவை கேள்வி கேட்க போய் ப்ளாக் ஆகி வந்தவங்க தான்.. இந்த வட்டம் தொடங்கும் முன்பு வரை என்னா ஆட்டம்.. அப்படியா சாரு ? உன்மையா சாரு, இது தப்பில்லையா சாருன்னு எதாச்சும் கேட்டா போதும் அதுக்கும் பதில் ங்கொம்மாவுல ஆரம்பிச்சு புண்...சிதி..யோனில போய் தான் முடியும்.. கூட இருக்கிற 20 பேர் தல தலன்னு ஆமாம் போடுறதுக்கு இருக்கிறாங்குற மிதப்பு...எதோ ரஜினி மாதிரி அவருக்கு பின்னாடி தான் தமிழ்நாடே இருக்குங்க மாதிரி நினைப்பு.. நாம யார வேனாலும் என்ன கெட்ட வார்த்தை சொல்லியும் திட்டலாம் இவனுங்க என்ன புடுங்கிடுவானுங்க நினைச்சிருப்பாரு.
ஒரு நிமிசம் இவங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்தா என்ன ஆகும்னு நினைச்சிருந்தா இன்னைக்கு இந்த வட்டமே இருந்திருக்காது... 
எனக்கு தெரிந்து வட்டம் தொடங்கிய இந்த இரண்டு மாதங்களில் ஒரு சில ஆபாச பின்னூட்டங்கள் தவிர்த்து எந்த கமெண்டும் இங்கே டெலிட் செய்யப் படுவதில்லை...யாரையும் ப்ளாக் செய்யதும் இல்லை...
விகடனில் எழுதும் போது மட்டும் எதோ பரம்பரை கோடிஸ்வரனை போல் எழுதும் இவர் இனையத்தில் மட்டும் எதோ அடுத்த வேளை உணவிற்கே வழி இல்லாதவர் போல் நடிப்பதை தான் இங்கே கண்டிக்கிறோம்.. நூறு ருபாயாக இருந்தாலும் பரவாயில்லை அனுப்புங்கள்னு ஒரு பதிவு...நான் அணியும் கண்ணாடி நாற்பதாயிரம் ருபாய், போட்டிருக்கும் ஜட்டி ரெண்டாயிரம் ருபாய், ரெமி மார்டின் மட்டும் தான் குடிக்கிறேன், வாரம் ஆயிரம் ருபாய்க்கு நாய்களுக்கு மீன் வாங்குறேன் ஒரு பதிவு. ரெனால்ட் பேனா, ஹாமாம் சோப் உபயோக படுத்துபவர்களை ஏளனமாக காமென்மேன்னு கிண்டல்...அதே காமென்மேனிடம் நூறு ருபாயாவது கொடுன்னு கெஞ்சல். இப்படி contrary எழுதும் உங்களிடம் வாசகர்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள்..
தமிழ்நாட்டின் ஐகானாக இருக்கும் கமலயும் இளையராஜாவையும் நீங்கள் கீழ்தரமாக விமர்சித்தால் அதை எல்லாரும் கை தட்டி ரசிக்க வேண்டும். உங்கள் மீது வைக்கப்படும் விமர்சணத்தை மட்டும் பொறாமை வையித்தெரிச்சல் அவதூறுன்னு சொல்லுவீங்க.
இந்த வட்டம் நீங்க எங்களுக்காக உருவாக்கி தந்தது.
***********************************************************************************************************
சாரு வாசகர் வட்ட அடிமைகள் ஒரு வேளை காசு குடுத்து ஒலக எழுத்தாளர் சாருவை சிலே அனுப்பி வைத்து விட்டால், அதன் பின்பு சாரு எழுத வேண்டிய பதிவு. அவருக்காக நாங்களே எழுதி விட்டோம்.

"என்னெருமைக் குஞ்சுகளோட குஞ்சுகளா... நான் விண்வெளிக்குப் போய் செவ்வாய்க் கிரகத்துல நின்னு பிர'பஞ்ச' இலக்கியம் படைக்கணும்கிறது தான் என்னோட 80 வருசக் கனவு.../வெறி... நீங்களே சொல்லுங்க இதுவரைக்கும் இந்த ஒலகத்துல யாரவது விண்வெளிக்குப் போய் ஒலக இலக்கியம் படைச்சிருக்காங்களா... இல்ல... ஏன்னா நம்ம பூமியோட எழுத்தாளர்களிண்ட தலையெழுத்து அப்படி... இதுவே பால்வீதிக்குப் பக்கத்து வீதியில இருக்கிற EA4856 கெரகத்து எழுத்தாளர்கள் ஒவ்வொரு 13 மணித்தியாலத்துக்கொருக்காலும் விண்வெளிக்குப் போய் நட்சத்திரங்களை ஆவுன்னு பார்த்து இலக்கியம் படைச்சுக்கிட்டிருக்காங்க... ஆனால் என் துரதிர்ஷ்டம் ஏழைக் கெரகமான இந்தப் பூமியிலே எழுத்தாளர்கள் யாரும் விண்வெளிக்குச் செல்வதற்கான வாய்ப்பே இல்லை...இந்தப் பூமியின் இலக்கிய உலகம் அந்தளவு சாபக்கேடு நிறைந்தது... மற்ற எழுத்தாளர்களைப் போல நானும் இந்தப் பூமியிலேயே கடைசிவரை கிடந்து செத்துப்போக வேண்டுமா...சொல்லுங்கள்...? பிர'பஞ்ச' எழுத்தாளரான நான் அப்படிச் செத்துப்போனால் என் கட்டை வேகவே வேகாது... இருபது வருடங்களுக்கு முன்பு உலகமே ஒன்று திரண்டு காறித்துப்பிய போதும் சிலேக்குப் போய் ஒலக இலக்கியம் படைக்க வேண்டும் என்று கூறி ஊரை ஏமாற்றிப் பிச்சை எடுத்தவனின் பெயர் வெறிக்குட்டி. அப்போது கூட சிலபேர் நான் ஊரை ஏமாற்றுவதை அம்பலப்படுத்தி என் சொகுசு வாழ்க்கையையும், சிலே பயணத்தையும் தடுக்க முயற்சிசெய்தனர். ஆனால் நானோ விதவிதமாக ஊரை ஏமாற்றி அடுத்த ஐந்தாவது வருடமே சிலே சென்று இறங்கி, அந்நாட்டு மொழி தெரியாமல், விபச்சார விடுதியென நினைத்து மகளிர் விடுதிக்குள் புகுந்து தர்ம அடி வாங்கிய அனுபவத்தை எக்ஸ்-காமக்கதைகள்-05 என்னும் புத்தகத்திலே எழுதியிருந்தேன். வழக்கம் போலவே நீங்கள் அதைப் படித்திருக்க மாட்டீர்கள் என்னும் தைரியத்தில் தான் உங்களிடம் பிச்சை கேட்கின்றேன். உங்களைப் போன்று இந்தப் பூமியிலேயே வாழ்ந்து இங்கேயே சாகும் ஒரு சாதாரண காமன் மேன் வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. நான் ஒரு காலத்தில் ரெமி மார்ட்டின் போன்ற மட்டமான பானங்களையெல்லாம் கூட குடித்து உயிர்வாழ்ந்தவன் தான். என்ன செய்வது என் பொருளாதார நிலைமை அன்று அப்படி... அன்று பிச்சை போட்டவர்கள் ரெமி மார்ட்டின் குடிக்கக் கூடிய அளவுக்குத்தான் பிச்சை போட்டார்கள்.... பின்னர் நான் எனது காமக் கதைகளை மொழிபெயர்த்து உலகம் முழுவதும் பரப்பி எனக்குப் பிச்சை போடும் வட்டத்தை விஸ்தரித்துக் கொண்டதால் ஏழை எழுத்தாளன் என்ற நிலையிலிருந்து நான் சற்று முன்னேறி பரமஏழை எழுத்தாளன் என்ற நிலையை அடைந்துள்ளேன்.... அந்த உரிமையிலும் தைரியத்திலும் தான் உங்களைக் கேட்கின்றேன். நான் இவ்வாறு கேட்பது இதுதான் இறுதி முறை...! எனக்குச் செவ்வாய்க்குப் போவதற்குப் பணம் தேவை. இல்லா விட்டால் நான் தற்கொலை தான் செய்து கொள்வேன். நான் இதை உங்களிடம் கெஞ்சிக் கேட்கவில்லை, உத்தரவிடுகிறேன். நீங்கள் எனக்குப் பிச்சை போட வேண்டியது உங்களின் கடமை. ஏனென்றால் நான் இந்த உலகத்துக்கு இலக்கியம் படைப்பதற்காக இந்த 80 வயதிலும் சளைக்காமல் விபச்சார விடுதிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்காக...."

***********************************************************************************************************
கொய்யாக்கா வாய்ஸ்:

சாரு ://ஜனநாயகக் குடும்பத்தில் காலை உணவு என்பதே பத்துக்கு மேல்தான். எனக்கோ காலை புலர்வது நாலரை என்பதால் எட்டரைக்கே பசி உயிர் போகும். வழக்கம் போல் யோகமுத்ரா போய் சாப்பிடலாம் என்றால் அதில் இரண்டு பிரச்சினைகள்.//
கொய்யாக்கா# வழக்கம் போல - அதாவது ஏழை எழுத்தாளம் தினமும் நூற்றி அம்பது ருபாய் சாண்ட்விச்சும் போய் வர ஆட்டோ சார்ஜ் நூறும் சேர்த்தால், ஓரு ஏழை எழுத்தாளன் காலையில் பசியாற அவர் செலவு செய்யும் தொகை வெறும் இருநூற்றி அம்பது தான். இந்த சமுகம் எங்க உருப்பட போகுது.

சாரு ://இந்த மீனை நடுக்குப்பத்தில் 800 ரூபாய்க்கு வாங்கி இருப்பேன். இரண்டு மணி நேரம் மிச்சம். என்னுடைய இரண்டு மணி நேரத்தை எவ்வளவு பணத்தாலும் ஈடு செய்ய முடியாது.// 
கொய்யாக்கா# ஆமாமா சொந்த காசுல வாங்குரவனா இருந்தா நாள் முழுக்க பேரம் பேசுவே? அடுத்தவன் காசுல தானே ஆட்டைய போட்டு வாழறே? 800 என்ன 2000 ரூவா கூட தூக்கி கொடுப்பே? ...த்தா தெரியாமதான் கேட்குறேன், பணம் இல்ல பணம் இல்லன்னு ஒரு பக்கம் பொலம்பிகிட்டு, இன்னொரு பக்கம் நாயிக்கு வாரம் 800 ரூபா செலவு பண்ணற மாதிரி காட்டி, மேற்குடி வாழ்க்கை வாழர மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கிறதுக்கு, பேசாம தூக்கு மாட்டிட்டு சாகலாம்.

சாரு ://என்னுடைய பாரிஸ் புகைப்படங்கள் எப்போது ஸ்கேன் செய்யப்படும்? இதையெல்லாம் ஒருவரே செய்து தர முடியாது… எனவே பாஸ்கருக்கு யார் யார் உதவ முடியும்?//
கொய்யாக்கா# ஒரு ஃபோட்டோவிற்கு அஞ்சு ருபாய் கொடுத்தா எல்லா ஜெராக்ஸ் கடைக்காரனும் பத்து நிமிசத்துல எடுத்து கொடுத்திடுவான். இப்படி பொழப்பை கெடுத்து உக்காந்து இத டைப் பண்ற நேரத்துல நீங்களே அதை ஸ்கேன் பண்ணிருக்கலாம்.

சாரு ://சில புத்தகங்களை சிலருக்கு அனுப்பித் தர வேண்டும்? யார் எனக்கு உதவ முடியும்?//
கொய்யாக்கா# தபால் துறை, கொரியர், ebay, flip kart.... இது கூட தெரியாம என்ன உலக இலக்கியம் எழுதுறீங்களோ போங்க.

//வெறிக்குட்டியின் சிறுகதையை ஒருவர் வாசித்தாராம் எப்போ தொடங்கினேன் எப்போ முடித்தேன்னு தெரியலையாம்..!//
கொய்யாக்கா# கொய்யால புத்தகத்த தூக்கியவுடன் தூங்கிட்டான்போல அதுதான் தெரியல போல..?
வெறிக்குட்டியின் புத்தகம் இனி சரோஜா தேவி புத்தகத்துக்கு மட்டும் மாற்றல்ல.. நல்ல தூக்கமாத்திரையும்கூட.!

சாரு ://எழுத்தாளர்களை மதிக்கத் தெரியாத ஒரு பெரும் இளைஞர் கூட்டமே இன்று உருவாகி விட்டது. என் மகன் வயது கூட ஆகியிருக்காத அந்த இளைஞனுக்கு சாமியார் நித்தியிடம் உள்ள நம்பிக்கையைப் பாருங்கள். நித்தி காண்பித்த கடிதத்தை நம்புகிறார். ஒரு எழுத்தாளனை நம்பவில்லை.//
கொய்யாக்கா# ஆமாய்யா...நித்தி கேன்சரை குணப்படுத்தியதை கண்ணால பாத்தேன்னு சொன்னா அதை நம்பனும், நாலு வருசமா வேலை கிடைக்காம இருந்த கருந்தேள் ராஜேஷ் நித்திக்கு பாத பூஜை செஞ்ச ஒரு வாரத்துல வேலை கிடைச்சிருச்சுன்னு எழுதினா அதையும் நம்பனும், 600 பக்க புக்கை எந்திரன் ரஜினி மாதிரி ஸ்கேன் பண்ணி வெறும் அஞ்சு நிமிசத்துல படிச்சதை நான் பாத்தேன்னு சொன்னா அதையும் நம்பனும். உங்க மனைவி American Accent ல வெள்ளி கிரகத்துல இருக்கிறவங்க கூட பேசுறாங்கன்னு சொன்னா அதையும் நம்பனும், கட்டை விரலை வச்சு அமுக்குன அடுத்த நொடி கால் வலி ஒடனே சரியா போயிடுச்சுன்னு சொன்னா நம்பனும்..ஏழு வருசமா குழந்தை இல்லாத தம்பதிக்கு நித்தி ஆசிர்வாதம் பண்ணுன ஒடேனே மூனு குழந்தை உருவாச்சுன்னு சொன்னா அதையும் நம்பனும்.
இதை எல்லாம் சொல்லிட்டு...நித்தி வீடியோ வெளியே வந்த உடன நீ பாட்டுக்கு மயிரே போச்சுன்னு நித்தி பத்தி எழுதின எல்லாத்தையும் அழிச்சிட்டு நித்தி ஒரு ஃபிராடு அவரை நம்பாதிங்கன்னு எழுதிட்டு போயிடுவ அதையும் நாங்க நம்பனும்.. ஏன்னா நீ எழுத்தாளன், போடாங்க...எதாச்சும் அசிங்கமா சொல்லிட போறேன்...
***********************************************************************************************************
இலக்கிய ஆதித்யா சேனல், நம்ம வட்டம் - இது ரெண்டுலயும் வெறிக்குட்டிய எப்படி பாக்குறாங்கன்னு ஒரு ஒப்பிடுதல் !

தல                                       -------  மண்ட
அல்டிமேட் ரைட்டர்            ------- அண்டர்வேர் பெக்கர்
புக்கர் பரிசு கொடுக்கணும்  ------- பெக்கர் பரிசு வேணும்னா கொடுக்கலாம்
ஆபாசத்திற்கு எதிரானவர்  ------- ஆபாசத்த தவிர வேற ஒன்னும் எழுத தெரியாது
நோபல் பரிசு வாங்க தகுதி உள்ளவர் ------ நோகாம பணம் வாங்கரதுல எக்ஸ்பெர்ட்
வாசகர்களுக்காக உயிரை கொடுத்து எழுதுகிறார் ------ வாசகர்களிடம் பணம் கேட்டு உயிரை எடுப்பவர்
எப்படி இவருக்கு இவ்வளவு பெண் வாசகிகள் ------ இருக்கற ரெண்டு வாசகிகளையும் சில்மிஷம் பண்ணி தொறத்தாம இருந்தா சரி
இலக்கிய தந்தை                                    ------ ஓசி குடி நைனா
ஜென் குரு                                               ------ ஜெகஜாலக் கில்லாடி
***********************************************************************************************************
Beyond Bounds என்ற தலைப்பில் என்னுடைய சிறுகதைகளும் Tishani Doshi எடுத்த என்னுடைய நீண்ட நேர்காணலும் ஆங்கிலத்தில் e book ஆக வெளிவர உள்ளது. இதற்கு நல்லதொரு அட்டைப் படம் தேவை. ரகளையான பாப் ஆர்ட்டாக இருக்கலாம்; அல்லது, நீங்களே முடிவு செய்யலாம்.
இதோ படம் ரெடி !!!!!