Saturday 17 August 2013

சாரு நிவேதிதா விமர்சகர் வட்ட சிறுகதை போட்டி முடிவுகள் அறிவிப்பு.

இன்றுடன் எங்கள் வட்டம் ஆரம்பித்து சரியாய் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. அதை கொண்டாடும் பொருட்டு சிறுகதை போட்டி நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, இதோ இப்பொழுது வெற்றிகரமாக நடத்தி முடித்தி விட்டோம். மண்டையை கலாய்ப்பது மட்டுமே எங்கள் வேலை என்று நினைத்த பல பேரின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி உள்ளது சிறுகதை போட்டி. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் வட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள். போட்டியின் முடிவு விபரங்கள் இதோ. 

பங்கேற்ற கதைகள்            :  95
அவற்றை எழுதியவர்கள்:  70

இந்த எழுபது பேரில் பெண்கள் 8 பேர். பெண்களின் கதைகள் வர ஆரம்பித்தபொழுது, அவர்களின் கதைகளை மதிப்பீடு செய்ய பெண் நடுவர் ஒருவராவது இருக்க வேண்டும் என எண்ணி ஒரு பெண் நடுவரை தொடர்பு கொண்டோம், ஆனால் சில காரணங்களால் அவரால் நடுவராக இருக்கமுடியவில்லை.

எங்களது ஐயத்தை பொய்பிக்கும் வகையில் அவர்களில் நான்கு பேரின் கதைகள் இறுதிச் சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது.

அடுத்ததாக, காலநீட்டிப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவுடன், ஒரு நடுவர் அதற்கு ஆதரவாகவும் மற்றொருவர் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். கடைசியில், காலநீட்டிப்பு செய்தால் சரியான நேரத்தில் கதைகளை அனுப்பியவர்களுக்கு செய்யும் அநீதியாகிவிடும் என்ற ஒருமித்த கருத்தோடு அந்த கோரிக்கையை நிராகரித்தோம்.

ஜூலை 31-ம் தேதி இரவு 11:59 -ற்கு கிடைத்த கதைதான் போட்டிக்கு கடைசியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கதை. அதற்குப் பிறகு வந்த 5 கதைகளை நிராகரிக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கு முன்பு விதிகளை மீறியதால் நிராகரிக்கப்பட்ட கதைகளோடு இவற்றையும் சேர்த்தால் மொத்தம் 20 கதைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், ஒரு போட்டியாளரின் கதை ஸ்பாம் ஃபோல்டெரில் சென்றிருந்ததால் நாங்கள் அதை பார்க்காமல் விட்டுவிட்டோம்.

போட்டியில் நடுவர்களின் மதீப்பீட்டை மட்டும் பிரதானமாக வைத்து முடிவுகள் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அறிவுப்பூர்வமாக அலசும் நடுவர்களின் மதீப்பீடு மட்டும் ஆரம்ப எழுத்தாளர்களுக்கு போதுமானதல்ல, பலதரப்பட்ட வாசகர்கள் அந்தக் கதைகளை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுவும் முக்கியம் என்ற காரணத்தால் வாசகர்களின் மதிப்பீட்டையும் ஒரு காரணியாக வைத்திருந்தோம். இறுதி முடிவகளைப் பார்க்கும்போது அதன் தேவை தெளிவாகிறது. நடுவர்கள் முதலாவதாக தேர்ந்தெடுத்த கதையும் , வாசகர்களால் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதையும் முறையே ஐந்து மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன. அனைவராலும் விரும்பபப்ட்ட கதைகளே முதல் இடங்களைப் பிடித்துள்ளன.

சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை அனுப்பியிருந்தனர். ஒரு போட்டியாளர் 12 கதைகளை அனுப்பியிருந்தார். அவரது ஒரு கதைகூட இறுதிச் சுற்றிற்கு தேர்வாகவில்லை என்றறிந்த பொழுது மிகவும் வருந்தினோம். கடைசி நாள் வரை, அவரது மூன்று கதைகள் டாப்-15-ல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்றில் நடுவர் ஒருவர் பத்து மதிப்பெண்கள் வழங்கிய கதை இறுதிச் சுற்றிற்கு தகுதியடையாமல் வெளியேறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகையால் போட்டியில் கலந்துகொண்ட அத்தனை கதைகளும் ஏதாவது ஒரு வகையில் சிறந்தவையே என்பதை இதன்மூலம் நாம் உணரமுடிகிறது. இன்று வாசகர்களின் யூகங்கள் இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
எங்களுக்குள் பல விவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள் நடந்தன. அவை அனைத்தும் சிறந்த கதைகளுக்கு பரிசு வழங்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே.

வேலைப்பளு அதிகமாக இருந்த காரணத்தால் அறிவித்தபடி நண்பர் பரிசல்காரனால் நமது போட்டியில் நடுவராக இருக்கமுடியவில்லை. இதை இங்கு தெரிவிப்பதற்கு காரணம் இருக்கிறது. ஒருவேளை இரண்டு நடுவர்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்து, ஒருவரது மதிப்பெண்களை நாங்களே எங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு அளித்திருந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். 

இறுதிச் சுற்றில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களையும், போட்டி பற்றி தங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

போட்டியில் பரிசு பெற்றவர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்ணை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இரண்டொரு நாட்களில் பணப்பரிமாற்றம் செய்யப்படும். பணம் கிடைத்ததை விமர்சகர் வட்டத்தில் உறுதி செய்யவும்.

முதல் பரிசு = 13000 Rs
இரண்டாம் பரிசு = 7000 Rs
மூன்றாம் பரிசு = 3000 Rs x 3


முதலிடங்களைப் பிடித்த கதைகள் பின்வருமாறு
முதல் பரிசு: அவள் பெயர் பூவெழினி by Subadhra Ravichandran  (கடைசி நிமிடத்தில் வந்த கதை)
இரண்டாம் பரிசு  : பூந்தளிர்க் காலம் by Sabitha Ibrahim
மூன்றாம் பரிசு -1: தஸ்லீமா by Johns David Anto
மூன்றாம் பரிசு -2: திருட்டுப் பசங்க by Gowtham Krishnan

நன்றி,
விமர்சகர் வட்டம்.

Tuesday 13 August 2013

ஒலக நடிகை ஷகிலாவுடன் ஒலக எழுத்தாளர் - சாரு டைம்ஸ் (14/08/13)

தமிழில் ஓர் உலக சினிமா:

இப்போதெல்லாம் நான் தமிழ் சினிமா பற்றிய விமர்சனங்களை எழுதத் துணிவதில்லை. காரணம் , அந்த விமர்சனங்களுக்கு வரும் எதிர்வினைகள் என்னை அவமானப் படுத்துவதாக இருக்கின்றன.

அதையும் தான்டி ஒரு சினிமாவை பற்றி எழுத காரணம் youtubeயில் சமீபத்தில் நான் பார்த்த சினிமா தான் . ஒரு நல்ல ஜனரஞ்சக சினிமா அது.படத்தை இயக்கியவர் ஒரு உயர்ந்த கலா ரசனையும் , சுரணையுணர்வும் கொண்ட இயக்குனர் என்பதற்கான அடையாளங்கள் அப்படத்தில் பல இடங்களில் தென்பட்டன . அதிலும் முகேஷாக நடித்திருப்பவரின் நடிப்பு உலகத்தரம் , க்ளாஸிக் டச். பட ஆரம்பத்தில் டாக்டராக வருபவரின் நடிப்பு , உடையலங்காரம் , அனைத்துமே ஒரு டாக்டரை நினைவுபடுத்துகிறது.தமிழ்ப் படங்களில் வழக்கமாகக் காணப்படும் அருவருப்பான அம்சங்கள் எதுவுமே இந்தப் படத்தில் இல்லாமல் இருந்தது.

பட்சத்தின் பன்ச் டயலாக் புகையிலை கேன்சரை கொடுக்கும் , புகைப்பழக்கம் மிகவும் கொடியது , மிகவும் கொடியது

சிரித்துச் சிரித்து வயிறே புண்ணாகி விட்டது. சிரிப்புப் படம் அல்ல. ஆனாலும் அப்படிச் செய்திருக்கிறார்கள்

முகேசாக நடித்திருக்கும் இளம் நடிகரின் நடிப்பு மிகவும் அற்புதம் - அதிலும் அவர் பேசிய வசனம் , நா ஒரு வருஷமா குட்கா சாப்புடுறேன்... அதனால எனக்கு வாய் கேன்சர் வந்துருச்சி... இதனால எனக்கு பேச்சு வராம கூட போகலாம்” என்று வசன்ங்களை உணர்ச்சி பூர்வமாக பேசுகையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த காட்சி படத்திலேயே மிகவும் கொண்டாட்டமான தருனம் , எனக்கே எழுத்து ஆட வேண்டும் போல இருந்தது.

படத்தில் அனைவரும் புதுமுகம் என்று யாராலும் சொல்ல முடியாது , இன்றைய கால கட்டத்தில் மனிதாபிமானம் தான் மிகப் பெரிய ஃபாஸிஸம். சக மனிதன் மீது அன்பு செலுத்துவதாகக் கருதிக் கொள்பவன் தன்னை மற்றவர்களிடமிருந்து உயர்ந்த இடத்தில் வைத்துக் கொள்கிறான்.இந்தப் படத்தின் Patriarch- ஆன டாக்டரை பார்த்த போது எனக்கு பப்பு ஞாபகமே வந்தது.

குடுபம்பத்துடன் காணவேண்டிய குதூகலமான படம் - இந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுதும்படி தினமும் 180 மெயில் வருகிறது , என் தீவிர வாசகர்களுக்கு இந்த விமர்சனத்தை பரிசலிக்கிறேன் .

இந்த படத்தின் ஆங்கில வடிவம்:

***********************************************************************************************
ஒலக நடிகை ஷகிலாவுடன் ஒரு பேட்டி:

நடிகை ஷகீலாவுடன் ஒரு பேட்டி எடுக்க முடியுமா என்று ஒரு பிராபல பத்திரிக்கை என்னை கேட்டிருந்தது.உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன்.பத்திரிக்கை பேட்டி முடிந்த பிறகும் பேசிக்கொண்டிருந்தோம். அது பேட்டியில் வரவேண்டாம் என்றும் , வேண்டுமானால் உன்கள் கதையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் சொன்னால் ஷகீலா.

"நான் உங்களுடைய தீவிரமான ரசிகன்" என்றேன் நான். இது ஷகீலாவுக்கு ஆச்சரியத்தை தந்தது.

"நான் உங்களுடைய கதைகளை படித்திருக்கிறேன் ,நீங்கள் ஒரு சரோஜாதேவி எழுத்தாளர் என்றும் புரிந்தும் வைத்திருக்கிறேன் . நீங்கள் எப்படி என்னுடைய ரசிகனாக இருக்கமுடியும்? நம்ப முடியவில்லையே ?என்றாள் ஷகி.

" என்னை பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியுமா ? ஆச்சரியத்துடன் கேட்டேன்

" நான் தான் முன்னாலேயே சொல்லிவிட்டேனே உங்களுடைய சமாச்சாரங்களை படித்திருக்கிறேன் என்று.உங்களுடைய சமாச்சாரங்களை படிக்க படிக்க மிகவும் சுவாரசியம் ஏற்பட்டது.அதிலும் "குனிந்து கொடு" என்று சொல்லி அதை விளக்கும் பகுதியெல்லாம் ஏதோ என்னை பற்றியே எழுதியிருப்பது போல் இருந்தது".

"ஷகீலாவின் இந்த பதிலை கேட்டவுடன் ,மிகவும் ஆச்சரியம் அடைந்தேன் அதை காட்டிக்கொள்ளாமல் , சரோஜாதேவி எழுத்தாளராகிய நான் உங்கள் ரசிகனாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல."

"சரி அது எப்படி சாத்தியம் "நான் வெறும் பெட்ரூம் , குளியல் ரோல்களிக் நடிக்கும் ஒரு சாதாரண நடிகை தானே ?"

" சாதாரண ஒரு பொறம்போக்கு பய எப்படி உங்கள் ரசிகனாக இருக்கிறானோ அதே மாதிரி தான் நானும் இருக்கிறேன் , தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் உண்மையை சொல்லகிறேன்.உங்களுடைய அசாதரணமான சமாச்சாரங்கள் தான் காரணம்"

நான் சொன்னதை கேட்டு வாய்விட்டு சிரித்தாள் ஷகீலா , ஆனால் அது மட்டுலமல்ல . என்ன தான் அவள் செக்ஸ் ரோல்களில் மட்டும் நடிப்பவள் என்றாலும் நடிப்பிலும் பெரீய நடிகை தான் என்பதையும் சொன்னேன்.

"ஒரு படத்தில் மாடியிலிருந்து படிக்கட்டில் இறங்கி வருகிரீர்கள் , அந்த காட்சி உலகப்புகழ் பெற்ற நடிகர்களின் தரத்திற்க்கு நிகராக இருந்தது.அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை அவ்வளவு தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தீர்கள் .ஆனால் பாருங்கள் நான் மட்டும் உங்கள் தீவிர ரசிகனாக இல்லை , இந்த தென்னிந்தியாவே கிரங்கிப்போய் தான் கிடக்கிறது , நாங்கள் எங்கள் கனவுகளை இழந்துவிட்டோம் ; நீங்கள் தான் எங்கள் எல்லாருடைய கனவாக விளங்குகிரீர்கள்.

நீங்கள் மட்டும் ஈஸ்ப்பனியோவிலோ , பிரன்ச்சிலோ நடித்திருந்தால் குறைந்தது நான்கு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கியிருக்கலாம் , ஆனால் என்ன செய்வது தமிழ்நாட்டின் அவலம் இது , இந்த நாட்டு மக்களுக்காக உடல், உடலிலுள்ள பொருள் , ஆவி அனைத்தயும் தியாகம் செய்யும் நம்மை போன்ற தியாகிகளை மதிப்பதில்லை" என்று முடித்தேன் .

***********************************************************************************************
ஆட்டோகிராப்:

ராமசாமிக்கு ஒரு நீண்ட கால ஆசை , ஒரு விலை அதிகமான ஆட்டோகிராப் நோட் வாங்கி எல்லா பிரபலங்கலளிடமும் ஆட்டோகிராப் வாங்கவேண்டும் என்பது , சிறுக சிறுக பணம் சேர்க்க ஆரம்பித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது . 3000 ரூபாய் ஒரு அழகான ஆட்டோகிராப் புத்தகம் தங்க நிற அட்டையுடன் வாங்கியும் விட்டான்.

இனி சந்திக்கும் பிரபலங்களிடம் ஆட்டோகிராப் வாங்க ஆரம்பிக்க வேண்டியது தான் , அவனுடைய ஊருக்கு நாளை ஒரு பிரபலமானவர் வருவதாக ஒரு தகவலை நண்பன் பிரவின் சொன்னான் . ராமசாமிக்கு ஒரே சந்தோஷம் , இரவு தூக்கம் கூட பிடிக்கவில்லை , அதிகாலையே கிளம்பிவிட்டான் அந்த செலிபிரட்டியிடம் ஆட்டோகிகிராப் வாங்க .

ராமசாமி ஹோட்டலை அடைந்த போது அந்த செலிபிரட்டி வெள்ளாடை அணிந்து ரிஷப்ஷன் இருக்கையில் தியானம் செய்வது போல அமர்ந்திருந்தார் , மிகுந்த படபடப்புடன் அவர் அருகில் சென்று ஆட்டோகிராப் புத்தகதை நீட்டினான் , அவர் ராமசாமியை மேலும் கீழும் ஒரு முறை பார்த்துவிட்டு , புன்னைகையுடன் கவிதையை போல ஏதோ எழுதி புத்தகத்தை மூடி ராமசாமியிடம் கொடுத்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்றுவிட்டார்.

ராமசாமிக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை , உடனே தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு கிளம்பிவிட்டான் , அவனுக்கு வாகனதை ஓட்டிக்கொண்டே ஏகப்பட்ட கற்பனைகள் , அவர் அன்புடன் என்று எழுதியிருப்பாரா , அல்லது என்னதான் எழுதியிருப்பார் என்று ,எதோ கவிதை மாதிரி எழுதிக்கொடுத்தாரே ஏதாவது வாழ்த்துக்கவிதையாக தான் இருக்கும் என்று .கிட்டத்தட்ட வானத்தில் மிதந்தான் .

வீடு வந்ததும் ஆவலுடன் தன்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தை பிரித்துப்பார்த்தான் , அதில் எழுதி இருந்ததை பார்த்ததும் அவனுடைய கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்து , அதில் எழுதியிருந்தது...
.
.
.
.
.
.
.
.
.
.
.
Name : Ar.........
A/C No xxxxxxxxxx
Branch T.Na...

IFC Code :.....

***********************************************************************************************
நீ படித்த புத்தகங்கள் மூன்று
நான் வாங்கும் 'பிச்சை' மூன்றெழுத்து
நான் வாழும் 'வெள்ளி' மூன்றெழுத்து
அனைத்துக்கும் ஆமாம் போடும் 'குஞ்சு' மூன்றெழுத்து
அனைவரையும் சேர்த்துச்சொல்லும்
'பன்மை' மூன்றெழுத்து
விமர்சகவட்டத்தில் என்னுடைய நண்பன்
'பாம்பு' மூன்றெழுத்து
என்னை அவர்கள் செல்லமாக கூப்பிடும்
'மண்டை' மூன்றெழுத்து...
இன்னும் இருக்கிறது 'மூன்றெழுத்துக்களில்'
நான் கொடுக்கும் 'குப்பி' மூன்றெழுத்து
ஆனால் பிழையாய் போன இரண்டு வார்த்தைகள்
'ஜென்' 'சிலே' இரண்டெழுத்தாய்
போனதால் எனக்கு இந்த 
தலையெழுத்து....


- 'மண்டை'யின் மானங்கெட்ட 'கவிதை' தொகுப்புகளிலிருந்து.
***********************************************************************************************
நோ-பெல் பரிசு எனக்கு தான்:


***********************************************************************************************
சிறுகதை போட்டி:

எங்கள் வட்டத்தின் "சிறுகதை போட்டி கடைசி கட்டத்தை எட்டி உள்ளது. கடைசி சுற்றுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ள 22 கதைகளை கீழே குடுத்து உள்ளோம். அந்த கதைகளை படித்து பார்த்து உங்களுக்கு பிடித்து இருந்தால் பிடித்த கதைகளுக்கு லைக் செய்யவும். 

Story: 62 நெஞ்சம் மறப்பதில்லை
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547982115251729/
********
Story: 58 விதியை நீங்கள் நம்புகிறீர்களா?
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547981831918424/
********
Story: 64 கருவறை
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547581125291828/
********
Story: 63 முள்வேலி
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547580378625236/
********
Story: 57 பரதேசி
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547579841958623/
********
Story: 65 பிழைப்பு
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547235988659675/
********
Story: 56 மனிதனிலிருந்து குரங்கானேன்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547235845326356/
********
Story: 55 கனவுகளின் பரமபத பாதைகள்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547235698659704/
********
Story: 66 நீண்ட இரவு
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546774778705796/
********
Story: 54 கடவுளும் கந்தசாமியும்.
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546774512039156/
********
Story: 71 மன வளர்ச்சி குன்றியவர்கள்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546402288743045/
********
Story: 46 வோல்கா
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546398838743390/
********
Story: 73 மிச்சமிருக்கும் உயிர்.
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546023232114284/
********
Story: 41 நாய்க்குட்டி மனசு
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546022848780989/
********
Story: 81ப்ரதீல்யா!
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545669478816326/
********
Story: 40 பாரம்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545669062149701/
********
Story: 83 தஸ்லீமா
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545272985522642/
********
Story: 29 பூந்தளிர்க் காலம்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545273468855927/
********
Story: 94 ஈவா
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544884498894824/
********
Story-26 நாவலுக்கான 23 குறிப்புகள்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544883865561554/
********
Story-95 அவள் பெயர் பூவெழினி
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544482285601712/
********
STORY-12: திருட்டுப் பசங்க...!!!
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544481765601764/


***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Monday 5 August 2013

சாவுற காலத்துல குடிகாரா, குடிகாரா - சாரு டைம்ஸ் (06/08/13)

சிறிது நாள் இடைவெளிக்கு பிறகு அல்டிமேட் ரைட்டரின் காமெடி பதிவுகள் தொடர்கிறது.

மண்டையோட சாவுற காலத்துல சங்கரா சங்கரா…! (2) பதிவிருக்கு கவுன்ட்டர் அட்டாக்.

After 1st round : நான் தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் படிப்பதில்லை என்பதால் அந்தப் பேட்டியை எப்படிப் படிப்பது என்று இணையத்தில் தேடிய போது

# அதாவது...சார் தமிழ்ல எதையும் படிக்க மாட்டாராம்..சரி வாங்க அடுத்த ரவுண்டுக்கு போவோம்.

After 2nd round : ஒரே ஒரு எழுத்தாளரின் எழுத்தை மட்டுமே படித்து விட்டு அ.மி. அன்னார் தான் தலைமுறையின் சிறந்த எழுத்தாளர், அவர் அளவுக்கு ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை என்று சொல்வது கயவாளித்தனம் இல்லையா?

# இப்போ நம்ம மண்டை என்ன சொல்றாருன்னா, ஒரு எழுத்தாளரை படிச்சிட்டு அவர் நல்ல எழுத்தாளர்ன்னு சொன்னா அது கயவாளித்தனம்..ஆனா நம்ம மண்டை யாரையுமே படிக்காம அதை எல்லாம் குப்பைன்னு சொல்லலாம்..அது பெரியமனுஷத்தனம்.. லைட்டா தலை சுத்துதா...கமான்..லெட்ஸ் கோ டூ த நெக்ஸ்ட் ரவுண்ட்

After 3rd round : ஒருமுறை என்னுடைய சிறுகதைத் தொகுதிக்கு அவரிடம் முன்னுரை கேட்ட போது ” எனக்கு இந்தக் கதைகள் புரியவில்லை” என்று எழுதிக் கொடுத்தவர் அ.மி.

# அந்த மாதிரி ஆளு கிட்ட போய் முட்டியை சொறிஞ்சிட்டு, முன்னுரை எழுதி தர முடியுமான்னு எதுக்கு கேட்டாருன்னு கேட்க்காம, நாம அப்படியே அடுத்த ரவுண்டுக்கு போயிடுவோம்.

After 4th round : இதுவரையிலான தமிழின் ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் ஊரின் மிக அழகான பெண் தான்.

# யாரும் டென்ஷன் ஆகாதீங்க...இதை எழுதினது நம்ம மண்டையே தான்... ஸோ நெக்ஸ்ட்

After 5th round : நான் அறிமுகம் செய்தவர்கள் அனைவருமே இந்திய மொழிகளுக்கே புதியவர்கள்.

# இவர் சொல்லி தான் எனக்கெல்லாம் கூபான்னு ஒரு நாடு இருக்குன்னே தெரியும்... so freeயா வுடுங்க..நாம அடுத்த ரவுண்டுக்கு போவோம்

After 6th round : மார்க்கேஸின் பெயரைத் தமிழில் உச்சரித்த முதல் நபரே நான் தான்.

# லைட்டா சிரிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு வாங்க.

After 7th round : கூபாவிலிருந்து Granma பத்திரிகையை வரவழைத்து அந்த மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தேன். இதற்காகவே ஸ்பானிஷும் படித்தேன். பத்து க.நா.சு.க்கள் செய்த வேலையை நான் ஒரே ஆள் செய்தேன்.

# 180 நிமிஷம் இயங்குவேன்னு சொல்லும் போதே தெரியாதா...நீங்க பத்து ஆள் செய்யுற வேலையை ஒரே ஆளா செய்வீங்கன்னு...கமான் கய்ஸ்...மனசை திடப்படுத்திக்கோங்க..

After 8th round : கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத் தளத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதினால் அது ஒரு ஆயிரம் பக்கம் வரும்

# அந்த ஆயிரம் பக்கத்துல o god..fck me..cunt, p*sy, டாக்டர் ஜோன்ஸ் வகையறாக்களை filter பண்ணி எடுத்திட்டா ஒரு பத்து பக்கம் வரும்..அது வேற ஒன்னுமில்லை, நம்ம மண்டையோட பேங்க் அக்கௌண்ட் நம்பர் தான்.

After 9th round : என்னுடைய நாவல்களில் ஆங்கிலத்தில் கிடைக்கக் கூடிய ஒரே நாவலான ஸீரோ டிகிரி இந்திய மொழியின் 50 சிறந்த நாவல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

# இதை எழுதினதும் நம்ம மண்டையே தான்..கொஞ்சம் கேரா இருக்குதில்ல...எனக்கும் தான்.

After 10th round : நான் எழுதியிருக்கும் நூல்களைப் படிக்க அவருக்கு ஒரு ஆயுள் போதாது.

# அதாவது நம்ம மண்டை புக்கை படிச்சா ஆயுள் அவ்வளவு தானாம்.

After 11th round : என்னைப் பொறுத்தவரை, ஜெ.வை நான் ஒரு நல்ல திரை வசனகர்த்தா என்றே நினைக்கிறேன். அந்த வகையில் நான் அவரது ரசிகன். மற்றபடி அவர் ஒரு புனைகதை எழுத்தாளர் அல்ல. அவரை விமர்சிப்பதற்காகக் கூட அவர் எழுத்தை என்னால் வாசிக்க முடியவில்லை.

# திரும்பவும் மொத ரவுண்ட்ல இருந்து...சியர்ஸ் ...!
***********************************************************************************************
விமர்சகர் வட்டம் சிறுகதை போட்டிக்கான நேரம் முடிவடைந்து விட்டது. இதுவரை 110-ற்கும் மேற்பட்ட கதைகள் வந்துள்ளன அவைகளில் 95 கதைகளைத் தவிர மற்றவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் தனித்துவம் பெற்றவை. தமிழ் இணைய உலகில் இது போன்ற சிறுகதை போட்டிகள் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் எங்கள் வட்டம் பெரும்பங்காற்றி இருப்பது மகழ்ச்சியை குடுக்கிறது. கதைகளை படிக்க: http://charuvimarsagarvattam.blogspot.com/
 
முதல் பரிசு = 13000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 3000 Rs x 2

***********************************************************************************************
விதி இருந்தா நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு கிடைக்கும்னு சொல்லுவாங்க...அது மாதிரி மண்டைக்கும் ஸ்பெயின் நாட்டுல இலக்கிய நாவல்களுக்கு குடுக்கிற விருதை மண்டை வாங்கிடுமோன்னு சில பேர் பயந்து இருப்பீங்க, அது மாதிரி எல்லாம் எதுவும் நடக்கவே நடக்காதுன்னு நாங்க ரொம்பவே நம்பிக்கையோடு இருந்தோம், எங்க நம்பிக்கை வீண் போகல, மண்டையோட 0 Degree இரண்டவாது சுற்றுக்கு தகுதி அடையல. 

ஏன் 0 டிகிரி இரண்டாவது சுற்றிற்கு தகுதியடையவில்லை என்பதற்கான உண்மையான காரணங்கள் :

1. அந்த அளவுக்கு அதில் பெரிதாக ஏதும் சாரம் இல்லை

2. அதி அற்புதமான ஆங்கில மொழி பெயர்ப்பு

3. தருண் டேஜ்பலை மண்டை அதீதமாக புகழ்ந்து அடித்த ஜால்ரா சப்தம்

4. மண்டையின் தலைக்கன தற்ப்புகழ்ச்சி

5. இன்டர்நெட்டில் ஏய்த்துப் பிழைத்து ஏமாற்றிவரும் மண்டையின் ஆளுமை

6. 0 டிகிரியின் இலக்கிய திருட்டு

7. மண்டையின் இரட்டை வேடங்களும் அடிவருடிதனங்களும்

8. மண்டையின் பாலியல் பயங்கரவாதம்

9. இலக்கியம் என்பதை அறியாமலே தன்னை நவீன இலக்கியவாதியாக பறை சாற்றிக்கொள்ளும் அற்பத்தனம்.

***********************************************************************************************
மண்டையின் தற்போதிய  மனநிலை:


***********************************************************************************************