Monday 8 July 2013

சாரு நிவேதிதா - விமர்சகர் வட்டத்தின் திறந்த சவால் - பரிசு 10,000

நண்பர்களே, எங்கள் "விமர்சகர்" வட்டத்தின் சார்பாக சிறுகதை பரிசு போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளோம். அனைவரையும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும்மாறு அன்புடன் அழைக்கிறோம். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், எங்கள் செல்ல புஜ்ஜி சாரு உட்பட. 


போட்டிக்கான பரிசு விபரம்:


முதல் பரிசு = 10000 Rs



இரண்டாம் பரிசு = 5000 Rs

மூன்றாம் பரிசு = 2500 Rs x 2



போட்டிக்கான விதிமுறைகள்:


  • யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
  • குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
  • இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
  • நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
  • 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள். நடுவர்கள் யார் யார் என்று கீழே குடுத்து உள்ளோம்.
  • ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  1. நடுவர்கள் = 70 %
  2. வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
  3. கதைக்கான Marks எப்படி வழங்க படுகிறது என்பதை இந்த சுட்டியின் முலம் அறிந்து கொள்ளுங்கள்.
  • கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
  • ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
  • கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
  • கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

போட்டிக்கான நடுவர்கள்:

Parisalkaaran Krishna Kumar (பரிசல்காரன்

சந்தேகங்கள் எதுவும் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்.


இவன்- சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் 

No comments: